×

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் காங். எம்.பி உயிர் தப்பினார்

சில்சார்: அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாயின் கான்வாய் மீது பின்னால் சென்ற கார்கள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுரவ் கோகாய் கும்பீர்கிராம் விமான நிலையத்தில் இருந்து சில்சாருக்கு சென்று கொண்டிருந்தார். அவரது கான்வாய்க்கு பாதுகாப்பாக காவல்துறை வாகனம் சென்று கொண்டிருந்தது. அதைதொடர்ந்து கட்சி தொண்டர்களும் 20 கார்களில் அணிவகுத்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பாதுகாப்பு வாகனம் திடீரென்று பிரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக கான்வாய் மீது விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் கவுரவ் கோகாய் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் 2 பெண்கள் உள்பட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் 9 பேர் காயமடைந்தனர்.

The post அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் காங். எம்.பி உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Silchar ,Congress ,Gaurav Ghokay ,Cachar ,Assam ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...